Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது - தமிழக அரசு

இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது - தமிழக அரசு

By: Monisha Mon, 08 June 2020 10:11:20 AM

இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது - தமிழக அரசு

தமிழகத்தில் இன்று முதல் இயங்க கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாட்டு முறைகளை அரசு வகுத்துள்ளது. அதனை விரிவாக காணலாம்.

* கடையின் நுழைவுவாயிலில் சோப்பு, தண்ணீர் அல்லது சானிடைசர் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். கடைக்கு முன்பு 2 மீட்டர் இடைவெளியில் குறியீட்டு அடையாளம் இடப்பட வேண்டும்.

* கடை உரிமையாளர், தொழிலாளி முககவசம், கையுறை அணிவதோடு, மூக்கு, கண், வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும். கடைக்குள் ஒரு வாடிக்கையாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 4 அல்லது 5 பேர் வெளியே குறிக்கப்பட்ட இடத்தில் காத்திருக்க வேண்டும்.

* காற்றோட்டத்துக்காக ஜன்னல்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட வேண்டும். சமூக இடைவெளி, முககவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விளம்பர பலகையை (3-க்கு 3 அடி) கடை முன்பு வைக்க வேண்டும்.

stores,companies,cough,cold,fever,government of tamil nadu ,கடைகள்,நிறுவனங்கள்,இருமல்,சளி,காய்ச்சல்,தமிழக அரசு

* கைப்பிடிகள், மேஜைகள் போன்ற அடிக்கடி தொடக்கூடிய பகுதிகளை கிருமிநாசினி கொண்டு நாளுக்கு 10 முறை சுத்தம் செய்யப்பட வேண்டும். கடை ஊழியர்களும் விழிப்புணர்வோடு தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.

* இருமல், சளி, காய்ச்சல் உள்ள கடை பணியாளர்கள் வீட்டில் இருக்க வேண்டும். மருத்துவரிடம் தங்களை காண்பித்து பரிசோதனை செய்து 7 நாட்கள் தனிமைப்பட வேண்டும்.

* இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது. கடைக்குள் நுழையும் முன்பும், வெளியேறும் போதும் அனைவரும் கைகழுவ வேண்டும். முககவசம் இல்லாத வாடிக்கையாளரை பொருள் வாங்க அனுமதிக்கக் கூடாது.

* தேவையில்லாமல் கடையில் எந்த பொருளையும் வாடிக்கையாளர்கள் தொட வேண்டாம். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை நன்றாக மீண்டும் கழுவ வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|