Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைதி இல்லாமல் செய்து விடாதீர்கள்; விக்னேஸ்வரனுடன் தர்க்கம் செய்யும் எம்.பி., டயனா கமகே

அமைதி இல்லாமல் செய்து விடாதீர்கள்; விக்னேஸ்வரனுடன் தர்க்கம் செய்யும் எம்.பி., டயனா கமகே

By: Nagaraj Sat, 12 Sept 2020 10:03:21 AM

அமைதி இல்லாமல் செய்து விடாதீர்கள்; விக்னேஸ்வரனுடன் தர்க்கம் செய்யும் எம்.பி., டயனா கமகே

அமைதி இல்லாமல் செய்து விடாதீர்கள்... இனவாதம், மதவாதத்தை மக்களின் மனங்களில் உருவாக்கி அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின் போதே டயனா கமகே இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் அதன்போது தெரிவித்ததாவது:

தமிழ் மக்கள் படும் துன்பங்களை அவதானித்துள்ளேன். வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் மிகவும் இனவாத, மத வாத பேதத்துடன் பேசுவதை கடந்த காலங்களில் அவதானித்தோம். அவருக்கு கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் எமக்கு இல்லாமல் போன ஆறுமுகன் தொண்டமானின் புத்தகத்தில் பக்கமொன்றை எடுங்கள். அவர் அவரின் மக்களுக்காக சேவை செய்வதற்காக ஜனநாயகத்தை தெரிவு செய்த சிறந்த நபராவார்.

vigneswaran,logic,female mp,last session,peace ,விக்னேஸ்வரன், தர்க்கம், பெண் எம்.பி., கடந்த அமர்வு, அமைதி

வடக்கு மக்களுக்கு வவுனியா தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியில் இணைந்து பணியாற்றியுள்ளேன். வடக்கு கிழக்கிற்கும் நான் யுத்தத்தின் பின்னர் சென்றுள்ளேன். சுதந்திரமடைந்து 73 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதில் 43 வருடங்களை மாத்திரமே அனுபவித்தோம். மிகுதி 30 வருடங்களையும் கொடும் யுத்தத்திலேயே கழித்தோம்.

இனவாதம் , மத வாதத்தை அந்த மக்களின் மனங்களில் உருவாக்கி பெற்றுள்ள அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம். நாங்கள் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார். ''.

இதேவேளை கடந்த அமர்விலும் குறித்த பெண் எம்.பி விக்னேஸ்வரனுக்கு எச்சரித்ததுடன் மீண்டும் தர்க்கம் புரிந்துள்ளார்.

Tags :
|