Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீங்க... நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீங்க... நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

By: Nagaraj Fri, 04 Aug 2023 06:44:23 AM

உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீங்க... நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை

நைஜர்: உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றியபோது கூறியதாவது:

niger,power supply,military,warning,world countries ,நைஜர், மின் விநியோகம், ராணுவம், எச்சரிக்கை, உலக நாடுகள்

நைஜர் மக்கள் மீது சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தவும், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் விரும்பும் அனைவரையும் தோற்கடிக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒற்றுமைக்காக நாங்கள் அழைக்கிறோம்.

எங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த எச்சரிக்கை உலக நாடுகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் வினியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளது.

Tags :
|