Advertisement

கொரோனாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது

By: Nagaraj Wed, 09 Sept 2020 10:01:10 PM

கொரோனாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது

அரசியல் ஆதாயம் தேடக்கூடாது... கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி யாரும் பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயத்தை தேடக்கூடாது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வாடிகன் சிட்டியில் சான் டமாசோ அரங்கில் நடந்த வாராந்திர கூட்டத்தில் சுமார் 500 பார்வையாளர்கள் முன்பு போப் பிரான்சிஸ் உரையாற்றினார். அப்போது, தடுப்பூசி உருவாக்குபவர்கள் அதை வெறும் லாபம் ஈட்டும் முயற்சியாக பார்க்கக்கூடாது என்று கூறினார்.

corona,politics,pope,people,backward ,கொரோனா, அரசியல், போப், மக்கள், பின்தங்கி


கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலை சிலர் மக்களிடையே பிளவுகளைத் தூண்டுவதற்கும், பொருளாதார, அரசியல் பிளவுகளைத் தேடுவதற்கும், மோதலைத் தொடங்குவதற்கும் அதிகரிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வதாக போப் பிரான்சிஸ் குற்றஞ்சாட்டினார்.

உலகம் முழுவதும் 205க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பு இழந்து, பொருளாதாரத்தில் மக்கள் பின் தங்கி உள்ளனர். பெரும் வேதனையை கொரோனா ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|