Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்... அமைச்சர் வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்... அமைச்சர் வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 15 June 2022 8:40:50 PM

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்... அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை: பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்... மேகதாது அணை விவகாரம் குறித்து, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இந்த விஷயத்தில் தமிழக அரசு அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி தரும் விதத்தில் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை தொடர்பாக அளித்துள்ள அறிக்கை பல செய்தித்தாள்களிலும், பிற ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. அவ்வறிக்கை முற்றிலும் ஏற்புடையதல்ல. மேகதாது அணை பிரச்சனை தமிழக விவசாய குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னையாகும். இதை அரசியலாக்கும் அவசியமோ, எண்ணமோ, தமிழ்நாடு அரசிற்கு இல்லை. தமிழ்நாடு முதல்வர், இப்பிரச்சனை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை அரசியல் ஆதாயத்திற்காக என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

பிரபல ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 15 கூட்டங்கள் நடத்தி உள்ளதாகவும், இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவும் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். கர்நாடக அரசின் அதிகாரிகள் இதுகுறித்து கர்நாடக முதலமைச்சருக்கு சரியான தகவல்கள் அளிக்கவில்லை போலும்.

minister,insistence,thuraimurugan,government of tamil nadu,dam construction ,அமைச்சர், வலியுறுத்தல், துரைமுருகன், தமிழக அரசு, அணை கட்டும்

இக்கூட்டங்களில் தமிழ்நாடு அரசு உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றது பற்றிய விவரங்கள் கூட்ட அறிக்கைகளில் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. உண்மை இவ்வாறு இருக்க, இறுதி ஆணையில் இல்லாத ஒரு பெரிய நீர்த்தேக்க திட்டத்தை மேகதாதுவில், அதுவும் கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீர்ப்பங்கீட்டிலேயே கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளது

உச்சநீதிமன்றத்தின் ஆணையை மீறும் செயலாகும். அரசியல் சாசன அமைப்பின்படியும், கூட்டாட்சி தத்துவத்தின்படியும், மாநிலங்கள் உச்ச நீதிமன்ற ஆணையை மதித்து நடக்க வேண்டும். அதை மீறுவது சட்டத்திற்கு புறம்பானது.

உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்சனை குறித்த வழக்குகள் நிலுவையிலுள்ளபோது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும். ஆகையால், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் வரை மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என கர்நாடக முதல்வரை, தமிழ்நாடு அரசின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags :