கொரோனா வைரசிடமிருந்து உயிர்களை காக்க உதவும் 5 மந்திரங்கள் எவை தெரியுமா ?
By: Karunakaran Wed, 01 July 2020 11:43:05 AM
உலகம் முழுவதும் பரவி வருகின்றன கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என உலகிலுள்ள சுமார் 780 கோடி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நூற்றாண்டில் இந்த கொரோனா வைரஸின் சேதத்தை கணக்கிட முடியாத அளவுக்கு எந்தவொரு வைரசும் ஏற்படுத்தியதில்லை. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது.
இந்த 6 மாத காலத்தில் உலகளவில் 1 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸிடமிருந்து காத்து கொள்ள 5 மந்திரங்கள் போல வரும் 5 முக்கிய வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது.
1. தனி மனித இடைவெளி, சுகாதார ரீதியில் தங்களை தற்காத்துக்கொள்ளுதல், கொரோனா வைரஸ் தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டுமே பகிர்தல்.
2. கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் தொடர்வு தடம் அறிதல், அவர்களை தனிமைப்படுத்தல்.
3. கொரோனா வைரஸ் பாதிப்புடையவர்களை விரைவில் அடையாளம் கண்டு சிகிச்சை அளித்தல், மருத்துவ சிகிச்சை கவனிப்புக்கு அதிக கவனம் செலுத்துதல்.
4. முதியவர்கள், நீண்டகால நோய் பராமரிப்பில் வாழ்கிறவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிதல், ஆபத்தில் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தல்.
5. கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை துரிதப்படுத்தல் போன்றவை உயிர்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றுவதற்கு வழிகாட்டுதல் என டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.