Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் பெண்ணின் காதில் கூடு கட்டி வசித்த சிலந்தி... மருத்துவர்கள் அகற்றினர்

சீனாவில் பெண்ணின் காதில் கூடு கட்டி வசித்த சிலந்தி... மருத்துவர்கள் அகற்றினர்

By: Nagaraj Wed, 03 May 2023 11:58:36 AM

சீனாவில் பெண்ணின் காதில் கூடு கட்டி வசித்த சிலந்தி... மருத்துவர்கள் அகற்றினர்

சீனா: பெண்ணின் காதில் சிலந்தி... சீனாவில் ஒரு பெண்ணின் காதுக்குள் சிலந்தி ஒன்று கூடுகட்டி மகிழ்ச்சியாக வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் காது வலியால் அவதிப்பட்ட பெண், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, மருத்துவர்கள் அவர் காதில் எண்டோஸ்கோபி செய்து பார்த்தனர். அப்போது அதில் மருத்துவர்கள் பார்த்த காட்சியானது அவர்களை திகைக்கச் செய்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான காது வலியால் அவதிப்பட்டிருக்கிறார். அதுபோக அவருடைய காதுகளில் எப்போதும் ஏதோ ஒன்று ரீங்காரமிடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது.

woman,ear,spider,nest,tool,doctors ,பெண், காது, சிலந்தி, கூடு கட்டியிருந்தது, கருவி, மருத்துவர்கள்

இது சாதாரணமான ஒன்றுதான், விரைவில் சரியாகிவிடும் என நினைத்த அவருக்கு மேலும் மேலும் அந்த சத்தம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். மருத்துவரிடம் நடந்த விஷயத்தைக் கூறி ஆலோசனை கேட்டுள்ளார். உங்கள் காதுகளுக்குள் எண்டோஸ்கோபி செய்து பார்க்கலாம் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். எண்டோஸ்கோபி செய்து பார்த்தபோது, காதுக்குள் சிலந்தி ஒன்று கூடு கட்டி குடித்தனம் நடத்தி வந்த விவரம் தெரியவந்துள்ளது.

இதைப் பார்த்த மருத்துவர்கள் அனைவரும் ஷாக் ஆகி, சிலந்தியை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். அந்த சிலந்தியும் எண்டோஸ்கோப்பி கருவியை தன் பற்களால் பதம் பார்த்துள்ளது. இறுதியில் ஒரு வழியாக மருத்துவர்கள் படாத பாடுபட்டு அந்த சிலந்தியை காதிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.

Tags :
|
|
|
|
|