கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிப்பா... மத்திய அரசு விளக்கம்
By: Nagaraj Sat, 18 Mar 2023 11:28:56 PM
புதுடில்லி: மத்திய அரசு விளக்கம்... கொரோனா தடுப்பூசி மருந்தால் மாரடைப்பு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், லோக்சபா எம்.பி., ராஜு ரஞ்சன் சிங் கூறியதாவது: கொரோனா காலத்திற்கு பின், மாரடைப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு தடுப்பூசி காரணமா? என்ற கேள்வியை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன், கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அதிக மாரடைப்பு விகிதம் குறித்து மத்திய அரசிடம் எந்தத் தகவலும் இல்லை என்றார்.
மேலும், கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக ஐசிஎம்ஆர் எந்த ஆய்வையும் நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.