இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் வழங்கிய நன்கொடை: ஹூருன் அறிக்கை
By: Nagaraj Sun, 05 Nov 2023 09:42:15 AM
புதுடில்லி; நன்கொடை பற்றிய தகவல்... நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் உள்ள 119 பெரும் பணக்காரர்கள் 8,445 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை அளித்துள்ளனர்.
இது, கடந்த ஆண்டைவிட 59 சதவீதம் அதிகம் என ஹுருன் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மிக அதிகமாக 2,042 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் அஸிம் பிரேம்ஜி 1,774 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 376 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
மிக அதிகபட்சமாக 2020-21-ஆம் நிதி ஆண்டில் 14,755 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 14 ஆக உயர்ந்துள்ளது.