Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்.. சுகாதாரத்துறை அறிவித்தல்.

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்.. சுகாதாரத்துறை அறிவித்தல்.

By: Monisha Tue, 12 July 2022 8:30:01 PM

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்.. சுகாதாரத்துறை அறிவித்தல்.

தமிழ்நாடு: தக்காளி காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என, அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.அண்டை மாநிலமான கேரளாவில், தக்காளி காய்ச்சல் என்ற பெயரில் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த வகை காய்ச்சல் குறிப்பாக சிறுவர்களுக்கு அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது.

கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை.ஒரு மாவட்டத்தில் கூட இந்த நோய் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. அத்துடன் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் இல்லை என்று கூறினார்.

tomato,flu,health,department ,தக்காளி, காய்ச்சல்,நோய்,பாதிப்பு,

இந்த நோய் மூலம் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும், மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட இது காரணமாகும் என்பது உண்மையே. ஆகவே பொது மக்கள் போதிய விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும் இந்த நோய் 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை மட்டுமே தாக்குவதால் குழந்தைகள் பாதுகாப்பாக கண்காணிக்கப்பட வேண்டும்.

தக்காளி காய்ச்சல் தோன்றுவதாக ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் உடனடியாக உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வதும், குழந்தைகளுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் வழங்குவதும் முக்கியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|