சோமாலியா தலைநகரில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்
By: Nagaraj Mon, 31 Oct 2022 10:48:59 PM
சோமாலியா: இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்... சோமாலியா தலைநகரில் நடந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 மேற்பட்டோர் படுகாயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த
இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியானதாக அதிகாரிகள்
தெரிவித்தனர். மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.