Advertisement

விமர்சனம் செய்த எம்.பி.யை கடிந்து கொண்ட டி.ஆர்.பாலு

By: Nagaraj Tue, 14 June 2022 5:33:01 PM

விமர்சனம் செய்த எம்.பி.யை கடிந்து கொண்ட டி.ஆர்.பாலு

சென்னை: எம்.பி,. மீது கோபப்பட்ட டி.ஆர்.பாலு... தி.மு.க., - ஐ,டி., அணி செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்த, தர்மபுரி எம்.பி., செந்தில்குமாரை, கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கடிந்து கொண்டாராம். மேலும் முதல்வர் ஸ்டாலினிடமும் புகார் செய்துள்ளாராம். சில நாட்களுக்கு முன், தி.மு.க., அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சமூக வலைதளத்தில், தி.மு.க., - ஐ.டி., அணி சில பதிவுகளை வெளியிட்டது. இதற்கு சில நுாறு பேர் மட்டுமே 'லைக்' செய்திருந்தனர். இதை சுட்டிக்காட்டிய, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், 'தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணிக்கு, அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கைக்கு, ஒரு பதிவுக்கு, ஆறு மணி நேரத்தில், ஒரு லட்சம் பேர் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால், அண்ணாமலைக்கு எதிரான பதிவுக்கு, ஆறு மணி நேரத்தில், 240 லைக்குகள் மட்டுமே வந்துள்ளன' என, கடுமையாக விமர்சித்திருந்தார்.

dmk circles,mp,public,criticism,d.r.palu ,திமுக வட்டாரங்கள், எம்.பி, பொதுவெளி, விமர்சனம், டி.ஆர்.பாலு

ஐ.டி., அணி செயலரான, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு மகன் ராஜா, 'செயல்படாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பதிலளித்தார். உடனே, '24 மணி நேரமும் என்ன செய்தனர் என்பதை, தினமும் மாலை 6 மணிக்கு, ஐ.டி., அணி நிர்வாகிகளிடம் பெற வேண்டும். 'இதை செய்தால் மட்டுமே, தி.மு.க., மீது பற்றுள்ள பெரும் போர் படையை உருவாக்க முடியும்' என, செந்தில்குமார் ஆலோசனைகளை அள்ளித் தெளித்துள்ளார். மகனின் பொறுப்பில் உள்ள ஐ.டி., அணி செயல்பாடுகளை, பொதுவெளியில் விமர்சித்த செந்தில்குமார் மீது, டி.ஆர்.பாலு கடும் கோபம் அடைந்துள்ளார். இது தொடர்பாக, அவரிடம் கடிந்து கொண்டதுடன், முதல்வர் ஸ்டாலினிடமும் புகார் தெரிவித்தாராம். நல்லது சொன்னால் இப்படியா என்று எம்.பி. நொந்து போய் உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|