Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொருளாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு

பொருளாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு

By: Nagaraj Thu, 03 Sept 2020 5:18:01 PM

பொருளாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் டி.ஆர்.பாலு

தி.மு.க.வின் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மூத்த தலைவர் டி.ஆர். பாலு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்காக ஆயத்தமாகி உள்ளார் துரைமுருகன்.

திமுக பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானதை தொடர்ந்து, அப்பதவிக்கு புதிய பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு எழுந்தது. இந்தப் பதவிக்கு மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்தும் விலகினார்.

எனவே, பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்ப வரும் 9ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. கட்சியின் அதிகாரமிக்க இரு பதவிகளை நிரப்புவதற்கான விருப்ப மனுக்கள் நேற்று விநியோகிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.

dmk treasurer,dr balu,candidate,thuraimurugan ,திமுக பொருளாளர், டிஆர் பாலு, வேட்புமனு, துரைமுருகன்

பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் டி.ஆர். பாலு தனது ஆதரவாளர்களுடன் வந்து அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கான போட்டியில் கட்சி மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, எவ.வேலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதில், பொருளாளர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று ஆ.ராசா தெரிவித்து விட்டார். இவரைத் தொடர்ந்து, எ.வ.வேலுவும் போட்டியிடப் போவதில்லை என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

இதனால், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. விரைவில் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவை மூத்த தலைவர் துரைமுருகன் தாக்கல் செய்ய உள்ளார்.

Tags :