Advertisement

நாளை திருச்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Mon, 27 Nov 2023 4:43:09 PM

நாளை திருச்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை துணை மின் நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதையடுத்து இது குறித்து வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்து உள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் நடைபெறயிருக்கிறது.

maintenance works,drinking water supply ,பராமரிப்பு பணிகள்,குடிநீர் விநியோகம்

இதனால் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை இப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இதன் காரணமாக ரயில் நகர் பழையது பகுதிகளிலும், lic காலனி பகுதிகளிலும் உள்ள உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு வருகிற நவம்பர் 29 ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போன்று மறுநாள் நவம்பர் 30 அன்று வழக்கம் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் கேட்டுகொள்ளப்பட்டு உள்ளது.

Tags :