Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நாளை முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

சென்னையில் நாளை முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

By: vaithegi Sun, 18 June 2023 2:10:23 PM

சென்னையில் நாளை முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

சென்னை : ஜூன் 19 முதல் 21ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை .... சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"Third Sustainable Finance Working Group (SFWG) கூட்டம் 19-6-2023 முதல் 21-6-2023 ஆகிய 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த Third Sustainable Finance Working Group (SFWG) meeting மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் அனைவரும் மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர்.

drones,chennai ,ட்ரோன்கள் ,சென்னை

எனவே, 18-6-2023 முதல் 22-6-2023 வரையில் சென்னை பெருநகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கூறிய பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு

மேலும் அப்பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் 18-6-2023 முதல் 22-6-2023 வரையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது." என அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags :
|