Advertisement

சென்னையில் வரும் 26ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை

By: Nagaraj Mon, 24 July 2023 00:01:56 AM

சென்னையில் வரும் 26ம் தேதி வரை  டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னையில் இன்று முதல் 26ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாமல்லபுரத்தில் நாளை முதல் 26ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடக்கிறது. இந்த ஆண்டு, இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்கின்றனர்.

26ம் தேதி,ban,chennai,drones,till 26th,today , இன்று, சென்னை, டிரோன்கள், தடை, வரை

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் 26ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறும் பகுதியில் டிரோன்கள் பறக்க மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ஜி-20 பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள், பயணம் செய்யும் வழித் தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் மற்றும் வழித் தடத்தில் டிரோன்கள் பறக்க விடத் தடை விதித்து, சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :
|
|