Advertisement

தமிழகத்தில் இந்த 2 நாட்களும் ட்ரான்கள் பறக்க தடை

By: vaithegi Sat, 04 Mar 2023 9:38:27 PM

தமிழகத்தில் இந்த 2 நாட்களும் ட்ரான்கள் பறக்க தடை

சென்னை: தமிழகத்தில் மக்களின் நலனிற்காக ஏராளமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த திட்டங்கள் மக்களுக்கு எந்த அளவிற்கு சென்று அடைந்துள்ளது என்பது பற்றி கள ஆய்வு நடத்த, முதல்வர் ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நிர்வாக பணி, மற்றும் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்ய இருக்கிறார்.

அந்த வகையில் மார்ச் 6 -ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 7 -ஆம் தேதி நெல்லையிலும் கள ஆய்வு நடத்த இருக்கிறார்.

tron,chief stalin ,ட்ரான்கள் ,முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் முதல்வரின் தென்மாவட்ட பயணத்தை ஒட்டி அவர் செல்லும் வழித்தடங்களில் மார்ச் 6, 7-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் மார்ச் 6 -ஆம் தேதி மதுரையில் இருந்து நெல்லைக்கும் மார்ச் 7 -ஆம் தேதி நெல்லையில் இருந்து மதுரைக்கும் சாலை வழியாக பயணம் செய்ய இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|