Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

By: vaithegi Thu, 08 June 2023 09:54:20 AM

முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை ..... மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ஆம் தேதி தண்ணீர் திறப்பட்ட உள்ளது. ஆகையால் அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வார வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து அதன்படி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெற்று வரும் நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தருகிறார்.

mettur dam,drones , மேட்டூர் அணை,ட்ரோன்கள்

தஞ்சாவூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தருகிறார்.

அவர் திருச்சி வருவதை முன்னிட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இன்று மற்றும் நாளை முதல் அமைச்சர் செல்லும் வழிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

Tags :