Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசாம் மாநிலத்தில் ரூ.15 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்

அசாம் மாநிலத்தில் ரூ.15 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்

By: Nagaraj Sun, 30 Oct 2022 8:55:45 PM

அசாம் மாநிலத்தில் ரூ.15 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்

கர்பி ஆங்லாங்: போதைப் பொருட்கள் பறிமுதல்... அசாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் நேற்று ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொஹஜன் சப்-டிவிஷனுக்குட்பட்ட தில்லை தினியாலியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. மணிப்பூரில் இருந்து வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, வாகனத்தின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 4 கிலோ மார்பின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

Tags :