Advertisement

அடுத்த 4 நாட்களுக்கான வறண்ட வானிலை நிலவக்கூடும்

By: vaithegi Fri, 10 Feb 2023 6:52:24 PM

அடுத்த 4 நாட்களுக்கான  வறண்ட வானிலை நிலவக்கூடும்

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டு மாண்டாஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிப்பை சந்தித்தன. மேலும் பெரும்பாலான பயிர் நிலங்கள் சேதமடைந்தன. இதையடுத்து தற்போது பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கியுள்ளது.

எனவே அதன்படி தற்போது, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிப்பொழிவு காணப்படுவதுடன் பகல் நேரங்களில் வறண்ட வானிலையும் நிலவி வருகிறது.

dry weather,chennai , வறண்ட வானிலை,சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் வருகிற பிப்ரவரி 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 தினங்களுக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ என தெரிவித்துள்ளது.அத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Tags :