Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை இருக்கக்கூடும்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை இருக்கக்கூடும்

By: vaithegi Thu, 02 Mar 2023 3:48:23 PM

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை  இருக்கக்கூடும்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக.. 02.03.2023 மற்றும் 03.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

04.03.2023 மற்றும் 05.03.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

06.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

dry weather,tamil nadu,puducherry,karaikal ,வறண்ட வானிலை  ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 04.03.2023 மற்றும் 05.03.2023: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :