Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற 24-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்

வருகிற 24-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்

By: vaithegi Tue, 21 Feb 2023 1:56:21 PM

வருகிற 24-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர் காலநிலை முடிவடைந்ததையடுத்து தற்போது வறண்ட வானிலை நிலவி கொண்டு வருகிறது. கடந்த 1 மாத காலமாகவே தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவி கொண்டு வருகிறது.

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் வெப்பநிலை கடந்த நாட்களை விட தற்போது அதிகரித்து காணப்படுகிறது.இதையடுத்து வரும் நாட்களில் மேலும் வெப்பநிலை உயரும் என்றும் ஏப்ரல் மாத இறுதியில் உச்சம் அடையும் என எதிர்பார்க்கபடுகிறது

dry weather,tamil nadu,puducherry , வறண்ட வானிலை,தமிழகம் ,புதுவை

தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் புதுவையின் காலநிலை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இன்று முதல் 24ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

Tags :