Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

By: vaithegi Sun, 05 Nov 2023 1:10:23 PM

டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு இந்த தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

புது டெல்லி: தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதுப்பு ...டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் உள்ள 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அது வருகிற நவம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று டெல்லியின் கல்வி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நிலைமையைக் கருத்தில் கொண்டு 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறலாம் என்றும் அவர் கூறினார். டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி கூறுகையில், டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபாடு சுகாதார அடிப்படையில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.

delhi,air pollution,holidays ,டெல்லி,  காற்று மாசு,விடுமுறை


மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, டெல்லியின் ஷாதிபூர் பகுதியில் உள்ள மக்கள் அதிகபட்ச மாசுபாட்டை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் கடந்த 3 நாட்களாக காற்றின் தர அளவு மோசமாகவுள்ளது.

டெல்லி குதுப்மினார் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெற்கு டெல்லி பகுதியில் மூடி படர்ந்த புகை மூட்டம் போல காட்சியளித்ததாக கூறப்பட்டு உள்ளது. இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.




Tags :
|