தொடர்ந்து மழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By: Nagaraj Fri, 15 July 2022 09:34:59 AM
நீலகிரி: நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி, கூடலூர், அப்பர் கூடலூர், அப்பர் பவானி உள்ளிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழையுடன் சேர்ந்து காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்
என்றும், மீட்பு பணிகளுக்கு 04232223828, 9789800100 ஆகிய எண்களை தொடர்பு
கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில்
நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி பள்ளி,
கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர்
அம்ரித் தெரிவித்துள்ளார். கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விடுத்துள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.