கொரோனா வைரஸ் காரணமாக நாகலாந்தில் ஊரடங்கு ஜூலை 15-ந்தேதி வரை நீட்டிப்பு
By: Karunakaran Tue, 30 June 2020 1:02:50 PM
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் தற்போது ஊரடங்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகலாந்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 18 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
தற்போது நாகலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 434 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருவதால், அங்கு ஊரடங்கு ஜூலை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயம், அத்தியாவசிய தேவை, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, கார், ஆட்டோ ஓட அனுமதி போன்ற தளர்வுகள் நீடிக்கும்.
வெளிமாநிலத்தவரால் கொரோனா நோய் பரவுவதை தடுக்க, அண்டை மாநிலங்களான அசாம், மணிப்பூர் மற்றும் அருணாசலப்பிரதேச எல்லைகள் மூடப்படவுள்ளது. மேலும், எல்லை பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் என நாகலாந்து அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-மந்திரி தலைமையில் அதிகாரிகள், மந்திரிகள் கூட்டம் நடைபெற்றபோது, இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னே கொரோனா பரவல் அதிகரித்திருப்பது குறிப்