Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடும் குளிர் என்பதால் தனியார் பள்ளிகள் 15ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க அறிவுறுத்தல்

கடும் குளிர் என்பதால் தனியார் பள்ளிகள் 15ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க அறிவுறுத்தல்

By: Nagaraj Mon, 09 Jan 2023 09:16:20 AM

கடும் குளிர் என்பதால் தனியார் பள்ளிகள் 15ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: பள்ளி விடுமுறையை நீட்டிக்க வேண்டும்... தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ந்தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

instruction,private schools,delhi govt.,extreme cold,vacation ,அறிவுறுத்தல், தனியார் பள்ளிகள், டெல்லி அரசு, கடும் குளிர், விடுமுறை

இதனிடையே டெல்லியில் அரசு பள்ளிகளுக்கு 15-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை முடிந்து இன்று 9-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் தற்போது குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு வரும் 15-ந்தேதி வரை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச அளவில் பதிவாகி உள்ள நிலையில், டெல்லி அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :