Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை .. அணைகள் நிரம்பி வருவதால் காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு

கனமழை .. அணைகள் நிரம்பி வருவதால் காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு

By: vaithegi Mon, 24 July 2023 11:31:56 AM

கனமழை ..  அணைகள் நிரம்பி வருவதால் காவேரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட குறைவாக பெய்த காரணத்தால் காவேரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது.

இதனால் கூடுதல் தண்ணீரை திறக்க கோரி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்து இருந்தார்.

cauvery,heavy rain ,காவேரி ,கனமழை


இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த 1 வாரமாக கனமழை அதிகமாக பெய்து வருவதன் காரணமாக குடகு, மைசூர், மாண்டியா பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாண்டியா பகுதியில் உள்ள அணையிலிருந்து காவேரி ஆற்றுக்கு 9,516 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 29,552 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது .

அதே போன்று கே.ஆர்.எஸ் அணையானது ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 95 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது . அதே போல கபினி அணைக்கும் நீர் வரத்து 20,714 அடியாக அதிகரித்துள்ளது. அணைகள் அதன் கொள்ளளவை வேகமாக எட்டி வருவதன் காரணமாக காவேரி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 12,536 கன அடியாக அதிகரித்துள்ளது.


Tags :