Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடரும் கனமழை ... இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடரும் கனமழை ... இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Thu, 03 Nov 2022 11:10:57 AM

தொடரும் கனமழை    ...   இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடரும் கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர். அதே போன்று தொடர் கனமழையின் காணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

holiday,heavy rain ,விடுமுறை,கனமழை

தமிழ்நாட்டில் கடந்த 29ஆம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது . அன்று முதல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளிலும் பல இடங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது.

மேலும் பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்து கொண்டு வருகிறது. சென்னையில் 2 தினங்களாக மழை கொட்டித்தீர்த்தது. இதில் சென்னையின் பெரும்பாலான இடங்கள் ஆறுகளாகவும் குளங்களாகவும் காட்சியளிக்கின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியும் செம்பரம்பாக்கம் ஏரியும் நிரம்பின.

Tags :