ரத்த அழுத்தம் காரணமாக மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு
By: Monisha Fri, 11 Dec 2020 2:34:43 PM
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூருக்கு அடிக்கடி சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். அதேபோல் இன்று காலையிலும் கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ரெட்டேரி ஜங்சன் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உதவிகள் வழங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடல் சோர்வடைவதை அறிந்த மு.க. ஸ்டாலின் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு ‘செக்அப்’ செல்ல வேண்டும் என்றார். உடனடியாக அருகில் இருந்த ‘பார் ஆர்த்தோ’ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு உடனடியாக அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருந்ததால் அதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவரது உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாக தகவல் வந்ததை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் நிம்மதி அடைந்தனர்.