நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மின் விநியோகம் தடை
By: vaithegi Sun, 21 May 2023 11:24:29 AM
சென்னை : தமிழகத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மின்தடை செய்யப்படவுள்ளது. இந்த பகுதிகள் பற்றிய விவரங்கள் இதோ ..... தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.
இதையடுத்து இத்தகைய பணிகள் நடைபெறும் போது குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இந்த மின்தடை குறித்த விவரங்கள் பதிவிடபட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் கீழ்வருமாறு:
அதன்படி உடுமலைப்பேட்டை:
பூளவாடி, கள்ளிபாளையம், பெரியபட்டி, குப்பம்பாளையம், கமலாப்பட்டி, ஏ.அம்மாபட்டி, மானூர்பாளையம், வடுகபாளையம், ஆத்துக்கு இனாத்துப்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், ஆப்புதூர், வரதராஜபுரம், கொத்தமங்கலம், குடிமங்கலம்
லட்சுமணம்பட்டி:
சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி
கோயம்புத்தூர்:
காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.