Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழையின் காரணமாக சில மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

மழையின் காரணமாக சில மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

By: vaithegi Mon, 16 Oct 2023 09:51:34 AM

மழையின் காரணமாக சில மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை: திண்டுக்கல், கரூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு ... தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

vacation,rain ,விடுமுறை , மழை

இந்த நிலையில் கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோன்று தொடர் மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags :