- வீடு›
- செய்திகள்›
- டீசல் தட்டுப்பாடு காரணமாக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 50 சதவீத பஸ்கள் நிறுத்தம்
டீசல் தட்டுப்பாடு காரணமாக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 50 சதவீத பஸ்கள் நிறுத்தம்
By: vaithegi Mon, 08 Aug 2022 10:38:16 AM
திருவனந்தபுரம்: கேரள அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடி. இதில் டீசல் செலவு ரூ.3.5 கோடி. இதை எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து தற்போதைய நிலையில் கேரள அரசுபோக்குவரத்துக் கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக அதிகரித்து உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன. எனவே போக்குவரத்துக் கழகம் தற்போது, தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து கொண்டு வருகிறது.
மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நிலுவையில் உள்ள ரூ.123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய பாக்கியான ரூ.139 கோடியை தீர்க்காமல் டீசல் வழங்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது சேவைகளை குறைத்து உள்ளது. டீசல் தட்டுப்பாடு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பயணிகள்மிக கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இடையே, கனமழை காரணமாக பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, அம்மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.