இந்தியாவில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரிப்பு
By: vaithegi Sun, 16 Apr 2023 3:00:16 PM
இந்தியா: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து விட்டது ஒரு வழியாக தொற்றிலிருந்து மீண்டு வந்து விட்டோம் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக திடீரென பாதிப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,093 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.அதே நேரம் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து 57,742 ஆக உள்ளது. மேலும் தொற்றிலிருந்து இருந்து மீண்டு குணமடைந்தவர்களின் விகிதம் 98.60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்றை விட இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவு தான் என்றாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.