ஒடிசா ரயில் விபத்து காரணமாக பிரதமர் மோடி கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து
By: vaithegi Sat, 03 June 2023 10:13:22 AM
ஒடிசா: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் ரத்து ...... ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் சந்தை ரயில் நிலைய பகுதியில் கர்நாடகாவின் பெங்களூர் நகரிலிருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (தடம் புரண்டரயில்) மீது
மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து இக்கோர சம்பவத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது.
இதையடுத்து இந்த விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பல அரசியல் , அரசு நிகழ்வுகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு கொண்டு வருகின்றன. ஏற்கனவே, இன்று கலைஞர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போன்று தற்போது பிரதமர் மோடி துவங்கி வைக்க இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கோவா – மும்பை இடையே இயங்கும் வகையில் வந்தே பாரத் ரயிலினை இன்று பிரதமர் மோடி டெல்லியில் காணொளி வாயிலாக துவங்கி வைப்பதாக இருந்தது. எனவே அந்த நிகழ்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.