Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துரைமுருகன் பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் - மு.க.ஸ்டாலின்

துரைமுருகன் பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் - மு.க.ஸ்டாலின்

By: Monisha Wed, 03 June 2020 4:06:00 PM

துரைமுருகன் பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் - மு.க.ஸ்டாலின்

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலனமானதால், அவர் பதவிவகித்து வந்த பொறுப்பு காலியாக உள்ளது. இந்நிலையில், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் அளித்துள்ளார். அவரின் விலகலை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுவதற்காக மார்ச் 29-ம் தேதி திமுக கட்சியின் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

dmk,mk stalin,duraimurugan,treasurer ,திமுக,மு.க.ஸ்டாலின்,துரைமுருகன்,பொருளாளர் பதவி

இந்நிலையில், இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

"கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திமுக சட்ட விதி: 17-ஐ பயன்படுத்தி, பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அப்பொதுக்குழு கூடும் வரையில், திமுக சட்ட விதி: 18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags :
|