Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது

By: vaithegi Sun, 03 Sept 2023 11:31:32 AM

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது

இந்தியா: வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி தெரிவித்து இருந்தார். மேலும் இக்கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ள நிலைய்ல், இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இக்கூட்டத்தொடரே கடைசி கூட்டத்தொடராக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

special session of parliament,election ,நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்,தேர்தல்

இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், தனி நபா் தீா்மானங்கள் மீதான அலுவல்கள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நட்டைபெறும். ஆனால் தற்போது சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :