Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த 4 நாட்கள் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

இந்த 4 நாட்கள் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

By: vaithegi Wed, 23 Nov 2022 3:52:46 PM

இந்த 4 நாட்கள்  தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

சென்னை: லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ ...... இன்று வட தமிழகத்தில் திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதை தொடர்ந்து வட மற்றும் தென் தமிழக பகுதிகளிலும் புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களிலும்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து நவம்பர் 24,25,26,27 ஆகிய 4 நாட்களும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. ஒரு சில பகுதிகளில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

rainy,tamil nadu,puduvai ,மழை ,தமிழ்நாடு, புதுவை

மேலும் வெப்பநிலையானது 28-29 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதால் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Tags :
|