உக்ரைன் நாட்டு பள்ளிகளுக்கு துலிப் மலர்கள் அனுப்பிய நெதர்லாந்து தன்னார்வலர்கள்
By: Nagaraj Fri, 03 Nov 2023 5:56:08 PM
நெதர்லாந்து: உக்ரைன் நாட்டு பள்ளிகளுக்கு துலிப் மலர்களை அனுப்பி உள்ளது நெதர்லாந்து என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பள்ளி மாணவர்களுக்கு, துலிப் மலர் செடிகளை நெதர்லாந்து தன்னார்வலர்கள் அனுப்பி உள்ளனர்.
கல்வி மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படும் வகையில் துலிப் மலர்கள் டன் கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
உக்ரைன் தலைநகரில் உள்ள பள்ளிகளில் துலிப் மலர்ச் செடிகளை மாணவர்களே நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று துலிப் மலர் செடிகளை நட்ட மாணவர்களின் முகத்தில் போரால் ஏற்பட்ட அச்சம் நீங்கி மகிழ்ச்சி காணப்பட்டது.
Tags :
tulips |
ukraine |
schools |