5 இடங்களில் நிலநடுக்கம்
By: vaithegi Mon, 23 Oct 2023 2:59:40 PM
இந்தியா: 24 மணி நேரத்தில் 5 இடங்களில் நிலநடுக்கம்- பதற்றத்தில் இந்திய எல்லைகள் … கடந்த 24 மணி நேரத்தில் நேபாளம், மியான்மர்,
காஷ்மீர், என இந்தியா மற்றும் எல்லையையொட்டி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து நேற்று காலை நேபாளத்தில் 5.3 என்ற அளவிலும், மாலை 4.3 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து, நேற்றிரவு 10.56 மணிக்கு ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு ஆகியுள்ளது.
அதைஹோடர்ந்து இன்று காலை 2 மணிக்கு மணிப்பூரிலும் 3.5 என்ற அளவிலும், மணிப்பூர் எல்லையை ஒட்டி மியான்மரிலும் 4.3 நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
Tags :
nepal |
myanmar |