அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
By: Nagaraj Wed, 21 Oct 2020 1:19:27 PM
நிலநடுக்கம்... அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் என்ற பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கந்தவேல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க வியல் மையம் கூறியுள்ளது.
மேலும் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும்
அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags :