Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்

கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:45:11 PM

கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்

கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 25வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது.

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 25வது கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநில முதல்வர்கள், பீகார் மற்றும் ஒடிசா மாநில துணை முதல்வர்கள் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

விழாவில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில் மண்டல கவுன்சில் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, 93 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது மிகப்பெரிய சாதனை. பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழக்கமான கூட்டங்களே இதற்கு காரணம்.

narcotics,prime minister narendra modi,union minister amit shah , பிரதமர் நரேந்திர மோடி, போதை பொருள், மத்திய அமைச்சர் அமித்ஷா

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பில் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியில் கிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும், கிழக்குப் பகுதியில் இருந்து இடதுசாரி தீவிரவாதம் பெருமளவில் ஒழிக்கப்பட்டுள்ளது.

அதனை முற்றிலுமாக ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் உருவாக்கப்படும். கிழக்கு மண்டல மாநிலங்களில், இடதுசாரி தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை கண்காணிக்கவும், அந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் வகையில் வளர்ச்சியை அடைவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மாவட்ட அளவிலான அமைப்புகள் உருவாக்கப்படுவதை முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும். போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன், போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். என்று கூறினார்.

Tags :