Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட்க்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக ஏமாற்றிவருவதாக .. ஈபிஸ் குற்றஞ்சாட்டு

நீட்க்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக ஏமாற்றிவருவதாக .. ஈபிஸ் குற்றஞ்சாட்டு

By: vaithegi Thu, 17 Aug 2023 10:35:06 AM

நீட்க்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக ஏமாற்றிவருவதாக ..  ஈபிஸ்  குற்றஞ்சாட்டு

சென்னை: செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வை அறிமுகம் செய்தது திமுக- காங்கிரஸ் கூட்டணிதான். நீட் தேர்வை ரத்து செய்ய புதிதாக எதையும் திமுக அரசு செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு பிரச்சனையை திமுக எழுப்பவில்லை.

இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிராக திமுக நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு செயல்பட முடியுமா? நீட் தேர்வுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக தொடர்ந்து ஏமாற்றி கொண்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த வித முயற்சியும் செய்யவில்லை.

dmk,epis,neet ,திமுக ,ஈபிஸ்  ,நீட்


மேலும் ஸ்டாலினுக்கு விவசாயிகளை பற்றியோ, தமிழக மக்களை பற்றியோ எந்தவித கவலையும் இல்லை. மதுரை அதிமுக மாநாட்டை கண்டு அஞ்சி திமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது. அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக உண்ணாவிரதமர் நடத்துவது வேண்டுமென்றே செய்யும் செயல்.

இந்தியாவே வியக்கும் வகையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இருக்கும், மாநாடு தொடர்பாக காவல்துறை உள்ளிட்ட துறைகளிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம்” என அவர் கூறினார்.

Tags :
|
|