காலரா தொற்று எதிரொலி.. காரைக்காலில் ..
By: Monisha Sun, 03 July 2022 7:53:47 PM
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்குஅதிகரித்து வந்தது.
இதனை கட்டுபடுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருபதுடன், கொதிக்கவைத்த தண்ணீரை குடிக்கவும். சாப்பிடும் முன் கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிபடுத்தவும், சரியாகக் கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும்.
பாதுகாப்பான கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காலரா பாதிப்பு காரணமாக பள்ளி,கல்லூரிக்களுக்கு விடுமுறை அறிவித்து உள்ளனர்.
ஆதலால் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளனர். மற்றும் பல்வேறு கட்டுபாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.