Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எடப்பாடி பழனிச்சாமியின் போலிப் பொதுக்குழு கலைக்கப்படுகிறது... ஓ.பி.எஸ். அறிக்கை

எடப்பாடி பழனிச்சாமியின் போலிப் பொதுக்குழு கலைக்கப்படுகிறது... ஓ.பி.எஸ். அறிக்கை

By: Nagaraj Tue, 02 May 2023 09:03:33 AM

எடப்பாடி பழனிச்சாமியின் போலிப் பொதுக்குழு  கலைக்கப்படுகிறது... ஓ.பி.எஸ். அறிக்கை

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியால் தேர்வு செய்யப்பட்ட போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட வேண்டும். கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதால் அவர்களை நீக்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கழகப் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாக, கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்ற விதியை மாற்றியும், அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளராக வர முடியும் என்கின்ற அடிப்படை விதியை மாற்றி 10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்மொழி வேண்டும்,

10 மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழி மொழிய வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து அடிப்படை தொண்டர்களின் உரிமையை பறித்தும், கழக சட்டதிட்ட விதிகளின் அடிப்படைக்கு நேர் விரோதமாக செயல்பட்டும் வந்த நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய போலி பொதுக்குழு அறவே கலைக்கப்பட வேண்டும்.

edappadi-palaniswami,general committee,notice,o panneer selvam ,அறிவிப்பு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், பொதுக்குழு

கழக உறுப்பினர்கள் மூலம் உண்மையான தேர்ந்தெடுக்கப் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் ஏப்ரல் 24-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற கழக அடிப்படை உறுப்பினர்கள் மாநாடு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பரிந்துரை செய்தது.

அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று, கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட போலிப் பொதுக்குழு கலைக்கப்படுவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த போலி பொதுக்குழு உறுப்பினர்களுடன் கழக உறுப்பினர்கள் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய பொதுக்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக, உண்மையான கழக உறுப்பினர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், அதன்பிறகு நியாயமான மற்றும் முறையான தேர்தல் மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|