- வீடு›
- செய்திகள்›
- பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக ஆலோசனை
பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக ஆலோசனை
By: Nagaraj Mon, 03 Apr 2023 10:06:41 AM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பிறகு முதல்முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.இதனை அடுத்து இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை கழகத்தில், வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிமுக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்டவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.