சுதந்திர தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிப்பு
By: vaithegi Tue, 15 Aug 2023 10:21:47 AM
சென்னை: எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து ... நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுகிறார்.இதையடுத்து பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்ளும் அவர் தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி கிராம சபை கூட்டங்களை நடத்தவும் மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாதாவது, இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், விடுதலை வேள்வியில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றி தலை வணங்குவதுடன்,
இந்த நன்னாளில் நம் நாடு கல்வி, அறிவியல், சமத்துவம் ஆகியவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட பாடுபடவும், நம் நாட்டின் ஒற்றுமையை பேணி காக்கவும் நாம் உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.