அதிமுக நிர்வாகிகளுடன் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை
By: vaithegi Sun, 16 July 2023 10:38:48 AM
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து இது தொடர்பாக நகல் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. எனவே இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். வருகிற ஆகஸ்ட் 20 தேதி மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். மதுரை மாநாட்டிற்கான ஏற்பாடுகள், அங்கு நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தவுள்ளார்.