- வீடு›
- செய்திகள்›
- ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி 250ற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி 250ற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
By: vaithegi Sat, 03 June 2023 2:47:44 PM
சென்னை: ஈபிஎஸ் வேதனை ...... எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய ரயில் விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறிந்து சொல்லொன்னா பெரிதும் துயறுற்றேன்,
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்பையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன் ,
மேலும் அது மட்டுமில்லாமல் தமிழக பயணிகளின் உற்றார் தொடர்பு கொள்ள தனி அவசர தொடர்புக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் .
மேலும் இக்கோர ரெயில் விபத்தில் இறந்த தமிழக பயணிகளுக்கு உரிய நிவாரண தொகையும் ,காயமுற்றோருக்கு நிதி உதவியும் உடனடியாக வழங்க வேண்டுமாய் வலியுறுத்துகிறேன். " என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.