Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேங்மேன் பணி ..அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கேங்மேன் பணி ..அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

By: vaithegi Sun, 24 Sept 2023 2:49:53 PM

கேங்மேன் பணி  ..அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


சென்னை: எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, 2017-ம் ஆண்டு எனது தலைமையிலான அம்மாவின் அரசு பதவியேற்ற நாளிலிருந்து, அம்மா ஆட்சியின் இறுதிநாள் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன.

இப்போது உள்ள அதே காவல்துறைதான் எங்களது ஆட்சியிலுமிருந்தது. ஆனால், அம்மாவின் அரசு அனைத்துப் போராட்டங்களையும் சட்டப்படி கையாண்டது. யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தில், குறிப்பாக போராடிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையிலும் எனது தலைமையிலான அம்மாவின் அரசு ஈடுபட

edappadi palaniswami,gangman ,எடப்பாடி பழனிசாமி,கேங்மேன்

ஆனால் திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியிலேயே, கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும் தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் எனவும் காவல் துறையை வலியுறுத்துகிறேன்.

மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமனஆணைகளை வழங்க, விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :