- வீடு›
- செய்திகள்›
- ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு
ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு
By: vaithegi Thu, 18 Aug 2022 11:41:57 AM
சென்னை : ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனை அடுத்து அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. எனவும் மேலும் ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்றுதனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு ஒன்றை செய்துள்ளது. மேலும் மேல்முறையீடு அவசரமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி கோரிக்கை வைத்தார்.
இதை அடுத்து வழக்கு வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.